மலைநாட்டு தொடருந்து சேவைகள் பாதிப்பு… வெளியான தகவல்!

Loading… கண்டியில் இருந்து பதுளை நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற சரக்கு தொடருந்து, வட்டவளை தொடருந்து நிலையத்துக்கு அருகில் இன்று காலை தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக, மலைநாட்டு தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதென தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. Loading… இந்த நிலையில், குறித்த தொடருந்தை தடமேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Loading…